இதுதொடர்பாக மேல்பட்டி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சக்கரத்தின் பிரேக் பைண்டிங் பகுதியில் பழுது ஏற்பட்டு புகை வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பழுதை சீரமைத்தனர். அதன்பிறகு 8.50 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்றது. காலதாமதம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சக்கரத்தில் ஏற்பட்ட புகையை உரிய நேரத்தில் கண்டறிந்து சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.
The post ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.