வீரவநல்லூர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்-கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு

நெல்லை : வீரவநல்லூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

வீரவநல்லூர் அருகே மலைச்செங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஜய் சமீபத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கண்ணன் மற்றும் குடும்பத்தினர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனு: எனது சொந்த ஊரான மலை செங்குளத்தை விட்டு நான் இப்போது வாகைகுளத்தில் வசித்து வருகிறேன். எனது அம்மா கடந்த 21ம் தேதி இறந்தார். அடக்கம் முடிந்த மறுநாள் எனது இரு மகன்களும் பொருட்கள் வாங்க அம்பை சென்றனர்.

எனது இரு மகன்களையும் கடத்திய கும்பல், இளைய மகன் விஜய்யை வெட்டிக்கொலை செய்தது.எனது மகனை கடத்திக்கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட எனது மகனை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். என் குடும்பத்தை 6 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எனக்கு விவசாயம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். என் சொந்த ஊரில் நாங்கள் வாழ்ந்திடவும், வீடு கட்ட அனுமதியும் வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: