நெல்லை : வீரவநல்லூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
வீரவநல்லூர் அருகே மலைச்செங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஜய் சமீபத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கண்ணன் மற்றும் குடும்பத்தினர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனு: எனது சொந்த ஊரான மலை செங்குளத்தை விட்டு நான் இப்போது வாகைகுளத்தில் வசித்து வருகிறேன். எனது அம்மா கடந்த 21ம் தேதி இறந்தார். அடக்கம் முடிந்த மறுநாள் எனது இரு மகன்களும் பொருட்கள் வாங்க அம்பை சென்றனர்.