சென்னை: தமிழ்ச்சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேரவையில் பேசினார். மாபெரும் தமிழ் கனவு நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் எனவும் கூறினார். பொன்னியின் செல்வன் வைக்கம் போராட்டம் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என கூறினார். திருக்குறளுக்கான கலைஞர் உரை தெலுங்கில் மொழியெர்ப்பு செய்யப்படும். தி.ஜானகிராமனின் சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். பிறதிராவிட மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். 2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.