பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அட்டி பிலாமூலை பகுதியில் மூன்று வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி பிலாமூலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் புகுந்த காட்டு யானைகள் உணவு பொருட்களை தேடி கூலித்தொழிலாளி சுப்ரமணி, கதிர்வேல், ராமையா ஆகியோரது வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.இதனால் அச்சமடைந்தது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதும் ஏற்படவில்லை.