புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கொண்டாடினர். காங்கிரஸ் மூத்த தலைவர்களும், கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜீவின் மகனுமான ராகுல் காந்தி, டெல்லியில் வீர் பூமியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.