மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் 59 பேருக்கு முதலமைச்சரின் இலவச தொகுப்பு வீடுகளை கட்டுவதற்கான அரசாணையினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற எம்பி ஜி.செல்வம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் வீடுகள் இன்றி கூரை வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் 59 பேருக்கு, தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் இலவச தொகுப்பு வீடு வழங்கும் நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து அனைவரையும் வரவேற்றார்.