புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் உயர் பதவிக்கான துறைத் தேர்வு சர்வர் கோளாறு காரணமாக நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்த 150 தேர்வாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ஆண்டுதோறும் துறைசார்ந்த நிர்வாக தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான தேர்வு தமிழகம் முழுவதுமாக இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் எழுதினர்.