மும்பை: ஒன்றிய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரை நீக்கியதால், மகாராஷ்டிரா அரசு ராஜீவ் காந்தி ஐடி விருதை அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் ஒன்றிய அரசின் சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என்ற பெயர் மாற்றம் செய்து பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ராஜீவ் காந்தியின் பெயரில் வழங்கப்பட்ட விருதை மாற்றம் செய்ததற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.