ராம்பூர்: பயிர் சாகுபடியில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய சலுகை பெறுவதற்காக பாஜகவை சேர்ந்த நடிகை மோசடி செய்ததாக, விவசாய சங்கத் தலைவர் பகீர் குற்றம்சாட்டி உள்ளார். கடந்தாண்டு நவம்பரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம், தொடர்ந்து காஜிப்பூர், சிங்கு எல்லையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், காஜிப்பூர் எல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இங்கு, 26,000 விவசாயிகளில் 11,000 விவசாயிகள் போலியானவர்கள். ஆலை உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகளவு கொள்ளையடித்துள்ளனர்.