டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் 14வது நாளாக முடங்கியது. நாடாளுமன்றத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவை சுமூகமாக நடைபெற எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் கூச்சம், குழப்பம் நிலவியதை அடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மாநிலங்களவையிலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது.