தங்கையின் கணவரை கைது செய்ய கோரி டிக்டாக் புகழ் லயா குடும்பத்துடன் தர்ணா: எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல்: தங்கையின் கணவரை கைது செய்யக்கோரி பிரபல டிக்டாக் புகழ் லயா, குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு படிக்க சென்ற இடத்தில், உடன் படித்த வடமதுரை அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திவ்யாவிற்கும், ராஜேஷ்வரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ‘கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்துகிறார்.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகாரளித்தார். புகாரின்பேரில், விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட திவ்யா, அவரின் அக்காவும் சமூக ஆர்வலருமான டிக்டாக் புகழ் லயா தர்மராஜ் மற்றும் அவரது பெற்றோருடன் நேற்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி ெகாண்டு, மனைவியிடம் வரதட்சணை ேகட்டு அடித்து துன்புறுத்தி வரும், ராஜேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து ராஜேஸ்வரன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: