திண்டுக்கல்: தங்கையின் கணவரை கைது செய்யக்கோரி பிரபல டிக்டாக் புகழ் லயா, குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு படிக்க சென்ற இடத்தில், உடன் படித்த வடமதுரை அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திவ்யாவிற்கும், ராஜேஷ்வரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ‘கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்துகிறார்.