ஈரோடு: ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.2.47 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக யுவராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனரான யுவராஜ், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவர்.