புதுடெல்லி: ஒன்றிய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி.யுமான தயாநிதி மாறன், ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன. இதுபோன்ற நிலையில், ஒன்றிய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி.யுமான தயாநிதி மாறன், ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு, மக்களவையில் நேற்று வெளியிடப்பட்டது.