திருப்பதி: திருப்பதி அடுத்த புத்தூர் மண்டல அலுவலகத்தில் கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ரோஜா வழங்கினார். அப்போது தப்பாட்டம் இசைத்தபடி நடனமாடினார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த புத்தூர் மண்டல அலுவலகத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கிராமப்புற கலைஞர்களுக்கு தப்புமேளம், கால் சலங்கை மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையை நேற்று வழங்கினார்.