திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேவஸ்தான நடவடிக்கை காரணமாக பக்தர்களின் வருகை குறைந்தது. மேலும், இலவச தரிசனம் டிக்கெட்டையும் ரத்து செய்தது. ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் விஐபி தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தற்போது சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப நகை மற்றும் பணத்தை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.