பெரம்பலூர்: திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் அப்துல்கனி பாஷா(72). எல்ஐசி வாடிக்கையாளரான இவரை சில வாரங்களுக்கு முன் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், உங்களது சேமிப்பு முதிர்வு தொகையை எங்களது நிறுவன கணக்கில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய அப்துல்கனி பாஷா மர்மநபர் குறிப்பிட்ட கணக்கில் ரூ.86,36,963ஐ டெபாசிட் செய்தார். பின்னர் தான் அந்த நபர், ஆன்லைன் மூலம் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த விபரம் அப்துல்கனி பாஷாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்தார்.