ஊட்டி: முதுமலையில் பசுமை திரும்பியுள்ளதால் சாலையோரங்களிலேயே வன விலங்குகள் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, பல்வேறு வகையான மான்கள், கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் காணப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இப்பகுதிகளில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டதால் செடி, கொடிகள் காய்ந்து போயின. தொடர்ந்து மே மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் வறண்டு போயின. காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் விலங்குகள் அனைத்தும் உணவு, தண்ணீரை தேடி அருகில் உள்ள மாயார் ஆற்றுபடுகை மற்றும் பந்திப்பூர் சரணாலயம் போன்ற பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தன.