நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், சரோஜினி நாயுடு சாலையை சேர்ந்தவர் உத்தண்டராயர்(51). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயசித்ரா(45). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். வெளியூரில் கல்வி பயின்று வருகின்றனர். உத்தண்டராயர் கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனது மனைவிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு சென்று வீடு திரும்பிய உத்தண்டராயர், மனைவி ஜெயசித்ராவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து மனைவின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார். இதில் அவரது இரண்டு கைகளும் துண்டாகி கீழே விழுந்தது.