திருமலை: தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்ணை ரயில்வே போலீசார் காப்பாற்றினர். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மும்பை செல்லும் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்ய நசீனா பேகம் என்ற பெண் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். ரயில் புறப்பட்டதை பார்த்த நசீனா பேகம் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, ரயில் படியில் கால் எடுத்து வைக்க முயன்றபோது கால் தவறி பிளாட்பாரத்தில் ரயில் பெட்டி அருகே விழுந்தார்.