வாலிபரிடம் நூதன கொள்ளை

ஆவடி: சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(39).  கடந்த 5 மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது,  ஆவடியை சேர்ந்த பெர்சோனா(23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி பெர்சோனா செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, `எனது கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என ஆசைவார்த்தைக்கூறி அவரை அழைத்துள்ளார்.  செந்தில்குமார் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இளம்பெண் உள்பட 4 பேர்  செந்தில்குமாரை மிரட்டி, அவரது போனில் உள்ள கூகுள்பே ஆப் மூலம் ரூ.13 ஆயிரத்தை பறித்தனர். மேலும், அவர் அணிந்திருந்த  தங்கச் சங்கிலிகள், பிரேஸ்லெட், மோதிரம் உள்பட 15 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பினர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: