புதுடெல்லி: அசாம் எல்லை விவகாரம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மிசோரம் மாநிலங்களவை எம்பி.யான வனலால்வெனாவுக்கு அசாம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். அசாம் - மிசோரம் மாநிலங்கள் இடையிலான எல்லை பிரச்னையில் கடந்த 26ம் தேதி மோதல் வெடித்தது. இதில், மிசோரம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அசாம் போலீசார் 5 பேரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த பிரச்னை தொடர்பாக, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியின் மாநிலங்களவை எம்பி.யான வன்லால்வெனா, அசாம் போலீஸ் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகளுக்கு மிரட்டல் விடும் வகையில் பேசினார்.