சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர் விருது’ அறிவித்ததற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். ‘தகைசால் தமிழர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான விருதை சங்கரய்யாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்க உள்ளார். இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, ‘தகைசால் தமிழர் விருது’க்கு சங்கரய்யாவை தேர்வு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.