கடத்தூர் : கடத்தூர் அருகே ராமியம்பட்டி, தென்கரைகோட்டை வரையுள்ள கவரமலை பகுதியில் பாஞ்சாலி நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் இருப்பதால், வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, குரங்குகள், மயில், மான் போன்ற வன விலங்குகள், அடிக்கடி வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.