ராமநாதபுரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அருகே உள்ள மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கலாமின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.