புழல்: செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்குன்றம் அடுத்த கோனிமேடு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்குன்றம் வனத்துறை அதிகாரிகள் நேற்று அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.