3 டன் செம்மரக்கட்டை பறிமுதல்

புழல்: செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்குன்றம் அடுத்த கோனிமேடு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்குன்றம் வனத்துறை அதிகாரிகள் நேற்று அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.  

அங்கிருந்து 30 லட்சம்  மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெங்காய மூட்டைகள் சேமித்து வைத்து விற்பனை செய்து வருவதாக கூறி, ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பதுக்கி வைத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, செம்மரக்கட்டைகள் பதுக்கிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: