ராஜீவ் கொலை கைதிகளுக்கு 30 நாள் பரோல் வழங்க முடியும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் உறவினர்கள் (உடல்நிலை பாதிப்பு குறித்து) கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் எங்களால் பரோல் வழங்க முடியும்.

மேலும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி, அதிக நாட்கள் பரோல் கேட்டால் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் நாட்கள் பரோல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: