திருவனந்தபுரம்: கேரளாவில் தனது 105வது வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி ஆச்சரியத்தை ஏற்படுத்திய மூதாட்டி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள பிராக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாகீரதியம்மா (107). இவர் கடந்த 2019ம் ஆண்டு தனது 105வது வயதில் கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்தும் 4ம் வகுப்பு தகுதி தேர்வு எழுதினார். இதில், 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். உலகிலேயே 105வது வயதில் இந்த தேர்வு எழுதியவர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு ஒன்றிய அரசின் ‘நாரிசக்தி விருது’ வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் இவரை பாராட்டி பேசினார்.