சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானத்தில் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று மாலை சென்னை வந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, 3வது அலையிலிருந்து தப்ப 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ், தடுப்பூசிகளை ஒன்றியஅரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.