மும்பை : ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஆபாச படங்கள் தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியானின் போலீஸ் காவல் ஜூலை 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனது கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என ராஜ் குந்த்ரா மும்பை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். ஆபாச படங்கள் மூலம் ராஜ் குந்த்ரா சம்பாதித்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.