டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டவர்களில் பட்டியலில் சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, அனில் அம்பானி, தலாய் லாமா உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. உலக தலைவர்கள் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதன் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் பெயர் அப்பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு வெடித்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் அனில் அம்பானியின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.