பிகானேர்: இன்று அதிகாலை ராஜஸ்தான், மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அம்மாநில மக்கள் பெரும் பீதியடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 5.3 ஆக அளவிடப்பட்டது. இருப்பினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமோ, உடைமை இழப்போ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், மேகாலயாவில் அதிகாலை 2.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மேற்கு கரோ மலைகளில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.