சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டிகள் சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாக, இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு டிஎன்பிஎல் 5வது சீசனில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. வீரர்களை தக்க வைத்துக் கொள்வது, விடுவிப்பது, புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் உள்ளிட்ட பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இதில் சில அணிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மட்டுமே நடைபெறுகின்றன.