லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்புவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இதனை கடுமையாக விமர்சித்து இருந்தார். ‘‘உத்தரப்பிரதேச போலீசாரை நம்பமுடியாது. குறிப்பாக பாஜ அரசை நம்பமுடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.