மார்த்தாண்டம்: குமரியில் நேற்று இரவு விடிய விடிய கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழர்ச்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 86.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது, அடுத்ததாக புத்தன்அணை பகுதியில் 84.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.