திருமலை: ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமைகளில், கருவறை முதல் கோயில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும் பணியான, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 16ம் தேதி இந்தாண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.