ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பாலம் ஒன்றில் இருந்து விழுந்த சரக்கு லாரி தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூரில் இருந்து சரக்குகளை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. கோட்டுப்பூட்லி என்ற இடத்தின் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது.