திருவொற்றியூரிலிருந்து கோவளத்திற்கு பேருந்து சேவை தொடக்கம்

திருவொற்றியூர்:  வடசென்னை பகுதியில் இருந்து கோவளம்  செல்ல  மாநகர பேருந்துகள் இயக்க வேண்டுமென திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனை  தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். முதல்வர் உத்தரவின்பேரில் திருவொற்றியூரில் இருந்து கோவளத்திற்கு 109டி என்ற புதிய வழிதட பேருந்துகள் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். புதிய பேருந்தை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, ஜெ.ஜெ.எபினேசர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Related Stories: