கமுதி: கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருது கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் சுத்தம் மற்றும் சுகாதார பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுவதையொட்டி, மத்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டுள்ளது.