திருமலை: ‘சித்தூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க முடியாது,’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர் நேற்று கூறியதாவது: திருமலையில் பல்வேறு இடங்களில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகளில் புனரமைப்பு பணி நடக்கிறது.பக்தர்கள் சிஆர்ஓ அலுவலகத்திற்கு வராமலே, ஓய்வறைகள் பெற திருமலையில் 6 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழுமலையானின் பூஜைக்கான பூக்களை திருமலையிலேயே வளர்க்க 5 ஏக்கரில் தோட்டம் அமைக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், தரிசன டிக்கெட்எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை. மேலும், தொற்று குறைந்த பிறகே இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.