ஸ்ரீநகர்: ஜம்முவில் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணுக்கு, நேற்று சீக்கிய வாலிபருடன் திருமணம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 4 சீக்கிய இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதை கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மத மாற்றத்தை தடுக்கும்படி ஒன்றிய அரசிடமும் மனு அளித்தது. அதே நேரம், இதில் சம்பந்தப்பட்ட பெண்களில் ஒருவர், தான் விருப்பப்பட்டே மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படியும் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.