சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் கேயார், மனோஜ் குமார், ஆர்.கே.செல்வமணி உள்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றியவர், அங்கமுத்து சண்முகம் (வயது 58). இவர், மறைந்த கலை இயக்குனர் அங்கமுத்துவின் மகன். கலை இயக்குனர்கள் சங்க தலைவராகவும், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளராகவும் 3 முறை தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அங்கமுத்து சண்முகம், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.