5 மாநில தேர்தலுக்கு தயாராகும் பாஜ

புதுடெல்லி: அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுவதையொட்டி, அங்குள்ள அரசியல் நிலவரம், தேர்தல் யுக்தி தொடர்பாக பாஜ உயர்மட்ட குழு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானி, கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற நான்கிலும் பாஜ ஆட்சி செய்கிறது. அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறுவதை பாஜ முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.

Related Stories: