தமிழகம் கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்து!: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் படுகாயம்..!! Jun 25, 2021 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி விபத்துக்கு ஆளாவதால் வாகனங்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சங்கராபுரம் அருகே வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சங்கீதா என்ற கர்ப்பிணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற போது ரோடுமாமாந்தூரில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நேர்ந்த விபத்தில் சங்கீதா அவரது மாமியார் உட்பட 3 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் சங்கராபுரம் அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 108 வாகனங்களை ஓராண்டுக்கு மேலாக பழுது பார்க்காமல் விட்டதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது மக்கள், நோயாளிகள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக அரசு உரிய கவனத்தை செலுத்தி 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!