இந்தியா பெங்களூரில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் இளைஞர் படுகாயம்!: கைவிரல்கள் இரண்டை துண்டாக்கியது மாஞ்சா நூல்..!! Jun 24, 2021 பெங்களூரு கர்நாடகா: காற்றாடி நூல் கழுத்தை அறுத்துவிட்டதால் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பட்டம் விடுதலை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கும் காணொலி இணையதளத்தில் வளம் வருகிறது. பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை ஆடுகுடி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நூல் அறுந்த பட்டம் ஒன்றின் மாஞ்சா கயிறு அவரது கழுத்தை சுற்றிக்கொண்டது. அதனை எடுக்க முற்பட்ட போது கழுத்தில் காயம் ஏற்பட்டதுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தயவு செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பட்டம் விடுதலை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். பொது இடங்களில் பட்டம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளைஞர் பெங்களூரு காவல்துறையை கேட்டுக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் தடையை மீறி பெங்களூரு நகரில் பட்டம் விடுவதும், பலர் காயமடைவதும், சிலர் உயிரிழப்பதும் தொடர்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்
பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!