திருவனந்தபுரம்: லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகையிடம் மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். லட்சத்தீவில் கெடுபிடி சட்டங்களை கொண்டு வந்து, அதன் நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல், மத்திய அரசு இணைந்து மக்களின் மீது உயிரி ஆயுதமாக கொரோனாவை பரப்பினர் என்று நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா சர்ச்சை கருத்தை கூறினார். இதையடுத்து பாஜ தலைவர் அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.