தமிழகம் மேகதாதுவில் காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு வலுக்கும் எதிர்ப்பு!: கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! Jun 21, 2021 காவிரி மருது காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் கும்பம் கும்பகோணம்!: மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா உருவபொம்மையை ஆற்றில் வீசி முழக்கங்களை எழுப்பினர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் மேலகாவிரி ஆற்றுப்பாலம் அருகே காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடக மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவபொம்மையை ஆற்றில் வீசி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனைத்து விவசாய அமைப்பினரையும் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கர்நாடக அரசு முயற்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்