தமிழகம் கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி தண்ணீர் கும்பகோணம் வந்தடைந்தது!: விவசாயிகள் மலர்தூவி வரவேற்பு..!! Jun 19, 2021 கும்பம் மலர்தூவி கும்பகோணம்: கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி தண்ணீர் இன்று கும்பகோணம் வந்து சேர்ந்தது. வீரசோழன் ஆற்றுத் தலைப்பில் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீரை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 16ம் தேதி கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கும்பகோணத்தை அடுத்த மணச்சேரிக்கு வந்தடைந்தது. மூன்று நாட்களில் 100 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்துள்ள தண்ணீர், காவிரி வீரசோழன் ஆற்றுத் தலைப்பில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறியது. ஆறு மற்றும் வாய்க்கால்கள் முன்னெச்சரிக்கையாக தூர்வாரப்பட்டுள்ளதால் அடுத்த 4 நாட்களில் கடைமாடையான பூம்புகாருக்கு காவிரி தண்ணீர் சென்றடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 1 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி
ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை
அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை
பறக்கும் படை கெடுபிடியால் மக்கள் பாதிப்பு; தேர்தல் நாளான ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை
“வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்; தமிழகத்தில் அடுத்தடுத்து ராகுல் பிரசாரம்: 4 இடத்தில் பேசுவதற்கு ஏற்பாடு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் 90 காலி பணியிடங்கள்: ஜூலை 13ல் முதல்நிலை தேர்வு
பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்
இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 15-சவரன் தங்க நகைகளை காவல் நிலையில் ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள்