சென்னை: சுசில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் மீது தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழை திரும்பக் கேட்டும், கல்விக் கட்டணத்தை திரும்பக் கொடுக்க மனு செய்து வருகின்றனர்.