திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மொகுலய்யா. இவர் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் கடந்த 11ம்தேதி தனது பேத்தியின் பிறந்த நாளை, பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். மெகா சைஸ் கேக் வெட்டி விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழாவுக்கு வந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் அன்றிரவு விடிய விடிய குத்தாட்டம் நடந்துள்ளது. இதில் இளம்பெண்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றபடி நடனமாடினர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த போலீசாரும், ஆளும் கட்சிப்பிரமுகர் என்பதால் கண்டும் காணாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிறுமிக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.