சென்னை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலர் தற்போது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆம்பிசோம் லிபோசோமல், ஆம்போடெரிசின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனையும் சிலர் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை சிலர் அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மேற்கண்ட பகுதியில் கண்காணித்தபோது, 4 பேர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வது தெரியவந்தது.